கடந்த ஏப்ரல் மாதத்தில், ஈரானிடம் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி 57 சதவீதம் குறைந்துள்ளது.
சீனாவுக்கு அடுத்து அதிக அளவில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக 6 மாதங்களுக்கு மட்டும் அமெரிக்கா ஈரானிடம் எண்ணெய் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஈரானுடனான வர்த்தக விலக்கை, நடப்பு மாதத்தில் இருந்து அனுமதிக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்ததால், தற்போது ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு 2,77,600 பிடிபி (barrels per day) என்ற வீதம் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இது 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத இறக்குமதி உடன் ஒப்பிடும் போது 57 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டும் இறக்குமதி 45 சதவிகிதம் குறைந்து, 304,500 பிடிபி ஆக இறக்குமதி செய்யப்பட்டது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் 552,000 பிடிபி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.